சாதி,மதம்,இனம்,மொழி ஆகியவைகளை கடந்து “மனிதராய் ஒன்றிணையும்” ஒரு புதிய முயற்சி
Tuesday 14 February 2012
ஜாதிய கூட்டமைப்புகளை தடை செய்
கடந்த நவம்பர் மாதம், தருமபுரி மாவட்டத்தில், நத்தம், அண்ணாநகர், கொண்டாம்பட்டி ஆகிய கிராமங்களில் தாழ்த்தப்பட்டோர் குடியிருப்புகள் மீது நடந்த கொடூரமான தாக்குதல் குறித்து அரசு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் அக்கரையில்லாம் இருக்கும் சூழலில், சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில், 02-02-2013 சனிக்கிழமை அன்று காலை 10-00 மணி முதல் பிற்பகல் 2-30 மணி வரை, ‘தருமபுரி தாழ்த்தப்பட்டோர் கிராமங்கள் மீது நடைபெற்ற வன்முறையை வழிநடத்திய முக்கிய குற்றவாளிகளைக் கைது செய்’ என வலியுறுத்தி தொடர் முழக்கக் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
தாக்குதலுக்கு உள்ளான நத்தம், அண்ணாநகர், கொண்டாம்பட்டி ஆகிய பகுதிகளைச் சார்ந்த ஊர் பொதுமக்களோடு இணைந்து தமிழ்நாடு மக்கள் கட்சி, திராவிடர் விடுதலைக் கழகம், சோசியல் டெமாக்ரட்டிக் பார்ட்டி ஆஃப் இந்தியா, சி.பி.ஐ.எம்.எல்.மக்கள் விடுதலை, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் உட்பட பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த பொறுப்பாளர்கள் இதில் பங்கேற்றனர். இந்த ஆர்பாட்டத்தை அறிந்த ம.தி.மு.க பொதுச்செயலாளர் வை.கோ அவர்கள் தாமாக முன்வந்து கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக கண்டன ஆர்பாட்டத்தின் நோக்கம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய, திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, முக்கிய குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை, களவு போன பொருட்கள் எதுவும் மீட்கபடவில்லை அதோடு பார்ப்பனரல்லாதார் இயக்கத்தின் மூலமாக சமூக முன்னேற்றம் பெற்றுள்ள நமது நாட்டில் தலித் அல்லாதோர் இயக்கம் என்ற ஒரு அநியாயமான அமைப்பு ஒன்றை ஏற்படுத்தி நடத்திக்கொண்டிருப்பதற்கு எதிராக - அந்த ஜாதியவாதிகளுக்கு எதிராக இந்த ஆர்பாட்டம் நடக்கின்றது. சிலர் இரத்துசெய்ய வேண்டும் என்று சொல்லுகின்ற ‘வன்கொடுமை தடுப்புச்சட்டத்தை’ மேலும் வலுவாக்கவேண்டும் – சரியாக பயன்படுத்தவேண்டும், தலைமறைவாக இருப்பதாக சொல்லப்படுகிற முக்கிய குற்றவாளிகள் வெளிப்படையாகத்தான் நடமாடிக்கொண்டிருக்கிறார்கள் அவர்களை கைது செய்யவேண்டும், இந்த தாக்குதலுக்குக் காரணமாக இருந்த காடுவெட்டி குரு, இராமதாசு ஆகியோர் மீதும் வழக்குப் பதிவு செய்யவேண்டும் இராமதாசு, மணிகண்டன் போன்றோரால் நடத்தப்படும் கூட்டங்களை அரசு இரத்து செய்யவேண்டும் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து நடைபெற்ற கண்டன ஆர்பாட்டத்திற்கு கொண்டாம்பட்டி பகுதியைச் சார்ந்த காசியப்பன் தலைமை ஏற்றார். திராவிடர் விடுதலைக் கழக தலைமை நிலைய செயலாளர் தபசி.குமரன் வரவேற்புரை ஆற்றினார். தமிழ்நாடு மக்கள் கட்சி அருண்சோரி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் தியாகு, வழக்கறிஞர் இரஜினிகாந்த், விடுதலை சிறுத்தைகள் வன்னிஅரசு, ஊடகவியாளர் கவின் மலர், தீண்டாமை ஒழிப்பு முன்னணி எஸ்.கே.மகேந்திரன், தமிழ்நாடு மக்கள் கட்சி selvi , ஆதித் தமிழர் பேரவை நீலவேந்தன் முதலானோர் தருமபுரி மாவட்டம் நத்தம், அண்ணாநகர், கொண்டாம்பட்டி ஆகிய பகுதிகளில் நடந்த கொடூர தாக்குதலை முன்வைத்து ஜாதிய தலைவர்கள் நடத்தும் கேவலமான அரசியலை பலபட தோழர்கள் விமர்சித்து பேசினார்கள்.
- கோகுலகண்ணன்
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் காதலர் கலைவிழா
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் காதலர் கலைவிழா. தொடர்ந்து சாதி மறுப்புக் காதல் திருமணங்களை நடத்திவைத்துக் கொண்டிருந்ததால் கோபமடைந்த ஒட்டன் சத்திரம் பகுதி ஆதிக்கசாதியினர் பெரியார் திராவிடர் கழகத் தோழர்களைக் கடந்த டிசம்பர் மாதம் கடுமையாகத் தாக்ககினர். சுமார் 300 பேர் கொண்ட கும்பலிடம் 10 பெரியார் தி.க தோழர்கள் சிக்கி பலத்த காயம் அடைந்தனர். அடித்த சாதி வெறிக்கும்பல் நிறைந்திருக்கும் அதே பகுதியில் தாக்கப்பட்ட தோழர்களுக்கு கருந்திணை சார்பில் பாராட்டுவிழா. காதலர் கலைவிழாவாக. அனைவரு்ம் வாரீர்!
Subscribe to:
Posts (Atom)